செந்தமிழ் நாடெனும் போதினிலே – ஒருதேள்வந்து கொட்டுது காதினிலே –எங்கள்மந்திரிமார் என்ற பேச்சினிலே – கடல்மண்ணும் சிரிக்குது பீச்சினிலே!
காவிரி தென்பெண்ணைப் பாலாறு – தமிழ்
கண்டதோர் வையைப் பொருனைநதி – என
மேவிய ஆறு பலவினிலும் – உயர்
வெள்ளைமணல் கொண்ட தமிழ்நாடு!
நீலத்திரைக்கடல் ஓரத்திலே –நின்றுநித்தம் தவம்செயும் குமரிகளே – வடமாலவன் குன்றம் தனில்ஏறி – தலைமழுங்கச் சிரைக்கும் தமிழ்நாடு!
கல்விசிறந்த தமிழ்நாடு – காம
ராசர் பிறந்த தமிழ்நாடு –நல்ல
பல்வித கேசுகள் பேப்பரிலே – வர
பாரெங்கும் நாறும் தமிழ்நாடு!
வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்துஉள்ளதும் கெட்ட தமிழ்நாடு –கொலைகொள்ளை எனும்மிக நல்ல தொழில்களைக்குறைவறச் செய்யும் எழில்நாடு!
சிங்களம் புட்பகம் சாவக மாகிய
தீவு பலவிலும் சென்றேறி – அங்கு
எங்கணும் தேயிலைத் தோட்டத்திலே கொடி
ஏற்றி வளர்ப்பவர் தாய்நாடு!
விண்ணை இடிக்கும் தலைஇமயம் –எனும்வெற்பை இடிக்கும் திறனுடையார் – தினம்தொன்னைப் பிடித்துத் தெருவினிலே – நல்லசோற்றுக் கலையும் தமிழ்நாடு!