Kamraj

சொத்து சுகம் நாடார் ,
சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார் ,
பொருள் நாடார்,
தான்பிறந்த அன்னையையும் நாடார் ,
ஆசைதனை நாடார் ,
நாடொன்றே நாடித் – தன்
நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்.

– கண்ணதாசன்