Posts from the ‘புகழாரம்’ Category

சொன்னது நீதானா…?

%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88

வெறும் சித்தாரையும் மிருதங்கத்தையும் வைத்துக் கொண்டு ஒரு சிறப்பான பாடலை கொடுக்க முடியுமென்றால் அது எம்.எஸ்.வி.யால் மட்டும்தான் முடியும்.

“நெஞ்சில் ஓர் ஆலயம்”  படத்தில் வரும் “சொன்னது நீதானா..” பாடல் கல்மனதையும் கரைய வைக்கும்.

தாய்மொழி தமிழல்லாத ஒரு பாடகி (பி.சுசிலா) இந்த அளவுக்கு தெளிவ்வன உச்சரிப்போடு, பாவத்தோடு, உணர்ச்சிகளைக் கொட்டி நம் மனதை உருக வைத்திருப்பதை வார்த்தைகளால் வருணிக்க இயலாது.

கண்ணதாசன் எழுதிய பாடல்களில் பொருள் நிறைந்த படக்காட்சியின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எழுதப்பட்ட பாடலிது.

படத்தைப் பார்க்காமலேயே, வெறும் பாட்டை மட்டும் கேட்டு விட்டு இக்காட்சியையும், பாத்திர அமைப்பையும் நம்மால் ஊகித்துவிடமுடியும்.

இன்றைய கவிஞர்களால் இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ற பாடல் அதே படத்தளத்தில் எழுத முடியுமா என்பது சந்தேகமே.

பாடல் எழுதுவதற்காக கண்ணதாசனுக்கு வேண்டி காத்திருக்கிறார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

நண்பனை “இந்த குடிகாரன் எப்ப வருவானோ?” என்று விமர்சிக்கிறார் அவர். இந்தச் செய்தி கவியரசரின் காதுகளுக்கு எட்டுகிறது. கடும் சொற்கள் அவர் மனதை முள்ளாய்த் தைக்கிறது. இடனே பாடலும் பிறந்து விடுகிறது.

“சொன்னது நீதானா?

சொல்…சொல்..சொல்.. என்னுயிரே”

கண்ணதாசனைப் பற்றி கலைஞர்

முயற்சியால் முன்னேறியவர்களை வழிகாட்டியாக ஏற்றிடுவீர்
உழைத்து உயர்ந்தோரைப் புத்தகமாகப் படியுங்கள்
இளைஞர்களுக்கு கருணாநிதி அறிவுரை

சென்னை, அக் 27- உழைத்து உயர்ந்தவர்களைப் புத்தகமாகப் படிக்க வேண்டும் என்று இளைஞர்களுக்குக் கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி சிந்தனையும் செயலும் எனகிற தலைப்பில் அவர் எழுதியதாவது-

நான், என இளமைப் பருவத்திலிருந்து எழுதிய கவிதைகள் பெரியதோர் புத்தகமாக அச்சியற்றப் பெற்று 1107 பக்கங்கள கொண்ட அப்புத்தகம், கவிதை மழை எனும் பெயரால் சென்னை சீதை பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய நண்பர் சின்னக் குத்தூசி அந்த அணிந் துரையின் ஆரம்பமாக-

‘தட்டிக் கொடுக்கப்படாமலே பூரணத்துவத்தை நோக்கி வளரக் கூடியவன் முதல் தரக் கவிஞன் என்று ஒரு கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் அரூப் தருமோ சிவராமு என்கிற பிரமீள்!

என்று எழுதியுள்ளதையும் படித்துவிட்டு, ‘பூரணத்துவத்தை நோக்கி வளரக் கூடியவன் தான்- வளர்ந்து விட்டவனல்லன் என்ற கணக்கை என்னைப் பற்றிப் போட்டுக் கொண்டிருப்பவன்” என்ற முறையில் இன்றைய சிந்தனையும் செயலும் பற்றிச் சில சொல்லுகிறேன்.

நான் அன்றாடம் உடன பிறப்புகளுக்கு தொடர்ந்து எழுதும் கடிதங்களில் ”மு.க.” என்று மட்டும் குறிப்பிட்டு முடிப்பதும்- தமிழில் மற்றவர்களுக்கு எழுதும் கடிதங்களில் எல்லாம் மு.கருணாநிதி என்றே கையெழுத்திட்டு அனுப் புவதுமான பழக்கத்தைக் கொண்டிருக்கிறேன்.

1937-38-ம் ஆண்டில் 13 அல்லது 14-ம் வயதில் நான் எழுதி இன்று வரை அச்சியற்றி வெளியிடப்படாமல் பாது காக்கப்படும் ‘செல்வ சந்திரா” எனும் நவீனத்துக்குத் தீட்டியுள்ள முன்னுரையில் ‘கூ.ஆ. கருணாநிதி” என்றே கையெழுத்திட்டிருக்கிறேன். அந்த நவீனத்தை நானே இப்போது படித்துப் பார்த்தால் எனக்கே கூச்சமாக இருந்தாலும்கூட அந்தப் பிஞ்சுப் பருவத்திலேயே அந்த முன்னுரையில் என கையெழுத்திலேயே-

‘தற்கால திராவிட நாடு, ஜாதி என்ற வலையில் சிக்கி, திராவிடரது கலை, நாகரீகம் எல்லாவற்றையும் சிற்சில மூட நம்பிக்கைகளால் இழந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது” என்பதை எத்துணை நெஞ்சுத் துடிப்போடு வெளியிட்டிருக்கிறேன் என்ற வேதனை உணர்வும் பொங்கிடத்தான செய்கிறது.

கடற்கரையோரத்து ஈர மணலில் நண்டுகள் ஓடிப்பதிந்த கோடுகளைப் போல அன்றிருந்த என தமிழ் எழுத்துத் திறனும் வடிவும் இன்று ஓரளவு தரமாகத் தென்படுகின்றதென்றால்- இடையில் இந்த எண்பதாண்டு கால முயற்சியும் உழைப்பும் வீண் போகவில்லை என்பதைத்தானே அது புரிய வைக்கிறது! சுயபுராணம் என்று கருதி யாரும் மனத்துக்குள் சிரிக்கக்கூடாது- முழுமையை முழுமையாகப் பெறாவிட்டாலும் முழுமையை நோக்கி ஒரு குறிப்பிட்ட தொலைவாவது என்னைப் போலக் கடந்து அடைந்திட எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாம் இளைஞர்களும், மாணவர்களும் தங்களின சுய வலிமையை உணர்ந்து, அதனைப் பெருக்கிக் கொண்டு வளர்ந்திட, வாகை சூடிட- இன்றைய சிந்தனையும் செயலும் சிறப்பாகப் பயன்படுமென்ற மன உறுதி மலைப்பாறை போல் எனக்கு உண்டு. எடுத்துக்காட்டாக என்னுயிர் நண்பர்களில் ஒருவரான கண்ணதாசனை உங்கள் முன்னால் நிறுத்துகிறேன்.

அவரது சுய வலிமைக்கும், சுய முயற்சிக்கும் இரண்டையும் பயன்படுத்தி அவர் பெற்ற வெற்றிக்கும் சான்றாக இதோ ஓர் ஆதாரப்பூர்வமான தகவல். இத் தகவல் 16-10-2005 தேதியிட்ட குங்குமம் வார இதழில் வெளிவந்துள்ளது. கவிஞரின் அண்ணன் ஏ.எல் சீனிவாசனின மகனும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.எல்.எஸ்.கண்ணப்பனின் மனைவி ஜெயந்தி கண்ணப்பனிடமிருந்து கிடைத்த கண்ணதாசனின கடிதம் அது. அவர், தன் அண்ணனுக்கு எழுதிய கடிதம் அவர் விடுதியில் தங்கி, முத்தையா என்ற இயற்பெயருடன் ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது, விடுதியில் தன உபயோகத்திற்குத் தேவைப்படும் பொருள்கள் குறித்து அண்ணனுக்குப் பட்டியலிட்டு அக்கடிதம் எழுதி யுள்ளார்.

என நண்பர் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது தலையணை உறையை ‘தலகாணி உரை” என்று எழுதியிருப்பது தான் நாம் கவனிக்கத்தக்கது. ஆறாம் வகுப்பு படிக்கும் போது கண்ணதாசன், முத்தையாவாக இருந்து தலையணை உறை என்பதைத் தலகாணி உரை என்று தவறாக எழுதியதற்காகத் தமிழ்த்தாய் அவரைச் சபித்துச் சாபமிட்டுவிட்டாளா? இல்லை! இல்லவே இல்லை!

தமிழ்த்தாய் அவரைத் தாவி அணைத்து வாழ்த்தி மகிழ்ந்தாள்! முயற்சிப்படிகளில் ஏறுக என்று கூறி உயர்த்திவிட்டாள்.

அதன்படி கண்ணதாசன் சுய வலிமையைப் பயன்படுத்தினார். அந்த வலிமையைப் பெருக்கும் முயற்சியில் இடைவிடாது ஈடுபட்டார்- பாடுபட்டார்-தமிழாசிரியராகப் பன்மொழிப் புலவர் அப்பாதுரை யாரை ஆக்கிக் கொண்டு- முயற்சியால் முன்னேறினார்- முறையாகத் தமிழ் கற்றார்- சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் திரைக்கூடத்து ஒத்திகை அரங்கில் அவரை எனக்கு கவி.காமு.ஷெரீப், கவிஞர் மருதகாசி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தபோது அவருடன் இருந்த அந்தத் திரைக்கூடத்து மேலாளர் சுலைமான் என்பார் என்னிடம் கண்ணதாசனைக் காட்டி ‘சார்! இவர் இங்கே ‘சண்டமாருதம்” பத்திரிகை ஆசிரியர் ‘எழுந்தால் காள மேகந்தான்!” என்பதுபோல ‘இவர் எழுந்தால் சண்டமாருதம் தான்” என்று புகழ்ந்ததை இன்று நினைத்தாலும் புல்லரிக்கிறது.

தொடர்ந்து பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் ‘கவிஞர்” எனப் புகழ் மகுடம் சூட்டினேன். அதன் தொடர்ச்சியாகப் புவியில் தமிழர் வாழும் இடமெல்லாம் கவியரசராகக் கோலோச்சத் தொடங்கினார்.

காலத்தின கோலம் மாற்று முகாமில் நின்று அவர் என்னைத் திட்டித் தீர்த்த போதும் ‘உன் தித்திக்கும் தமிழுக்காக அதைப் பொறுத்துக் கொள்கிறேனய்யா!” என்றே சொல்லியிருக்கிறேன்.

திரைப்பாடல்களா? வார்த்தைகள் தாங்களாகவே வடிவமைத்துக் கொண்டு அவர் இருந்த திக்கு நோக்கித் தெண்டனிட்டன!

கற்கண்டுகளென வந்து விழும் சொற்களோ அவரைக் கரங்கூப்பித் தொழுது அவர் கட்டளைக்கேற்பக் கவிதைகளாக உருப்பெற்றன!

‘தலையணை உறை” என்பதை ”தலகாணி உரை” என்று எழுதியவர் தமிழுலகின் உச்சாணியில் ஒளியுமிழ்பவரானதற்கு சுயவலிமையும், சுய முயற்சியும்தான் தலையாய காரணம் என்பதை உணர்ந்து கொண்டால் இன்றைய இளைஞர்கள், அந்தக் காரணத்தைக் கருத்தில் பதிய வைத்துப் பணியாற்றினால் கோபுரத்துக் கலசங்களாகலாமன்றோ! அத்துடன் கொள்கை உறுதியும் இணைந்தால் கலசங்கள கலங்கரை விளக்கங்களாகவும் மாறுவது உறுதியன்றோ?

எனவே என வேண்டுகோள்-

இளைஞர்கள் மாணவர்கள்
எழுஞாயிறுகளாக ஒளிவிட
வரலாறு படியுங்கள்-
வரலாற்று நாயகர்களை வணங்குங்கள்-
வீரர்களை அறிந்து கொள்ளுங்கள்-
விவேகிகளைப் புரிந்து கொள்ளுங்கள்-
விஞ்ஞானிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்-
விஞ்ஞானப் புதுமைகளைக் கற்றுக் கொள்ளுங்கள்-
தியாகிகளைப் பாராட்டுங்கள்- நமது
திருநாட்டைப் பாதுகாத்திடுங்கள்!
வாழ்க்கைப் பயணத்தைப் பகுத்தறிவு
வழியில் மேற்கொள்ளுங்கள்!
உழைத்து உயர்ந்தவர்களைப் புத்தகமாகப் படியுங்கள்!
முயற்சியினால் முன்னேறியவர்களை வழிகாட்டிகளாக ஏற்றிடுங்கள்.

திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில், கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட ‘நான் மனமாக இருந்து நினைப்பேன்… நீ வாக்காக இருந்து பேசு’ என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. ஆனால் அதையே நான் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது.

படிக்காத மேதை

கண்ணதாசன்

பட்டப்படிப்பு படிக்கத்தான் நினைத்திருந்தேன்
கொட்டும் மொழி மழையிற் குளிக்கத்தான் நினைத்திருந்தேன்
ஆனால் எட்டாம் வகுப்பை எட்டத்தான் என் பெற்றோர்
இட்டார்;பின் ஏழ்மையிலே என்னை உலகில் விட்டார்
கல்வியிலான் வாழ்வு கரைகாணாத் தோணியெனக்
கலங்கினேன்; கற்றோரைக் கண்டு கரையில் நின்றேன்.

– கண்ணதாசன்

புகழாரம்

Karunanidhi

” கண்ணதாசன் என்னை உயர தூக்கி வைத்து புகழ்பாடிய காலங்களும் உண்டு பின் மேலிருந்து என்னைத் தொப்பென்று கீழே போட்ட காலங்களும் உண்டு. ஆனால் கீழே விழுந்தபோது அவனது தமிழின் அழகு எனக்கு மெத்தையாக இருந்தது ”

– கலைஞர் மு.கருணாநிதி

நண்பர் ஜாஃபர் அலி (ஹரன்) அவர்களின் வலைப்பதிவு கவியரசரின் கவித்துவ மேன்மையை பறைசாற்றும் வண்ணமுள்ளது.

பார்க்க சுட்டி : http://kaviyarasar.blogspot.com/

e0ae9ae0aebfe0aeb5e0ae95e0af8de0ae95e0af81e0aeaee0aebee0aeb0e0af8d

வாழும்போது ஒருவரை புகழ்வதைவிட, அவர் இறந்தபின்னரும் புகழ்வது கடினமான காரியம்.  ரசிகர்கள், தமிழ் உணர்வாளர்கள் நெஞ்சத்தில் எப்போதும் நிறைந்திருப்பவர் கண்ணதாசன். கவிதையில் வீச்சு, எழுத்து நடையில் எளிமை என அவர் தனிபாணியே வகுத்துவைத்திருந்தார். காதல், தத்துவம், ஆன்மிகப் பாடல்களில் கற்பனையின் உச்சத்துக்கே சென்றவர் கண்ணதாசன்

நடிகர் சிவக்குமார்.