மாடுதின் னாமலும் மனிதர்தொ டாமலும்
வைக்கோலிற் படுத்த நாய்போல்
வையம் பெறாமலும் மண்ணில் விழாமலும்
மாகடல் கொண்ட மழைபோல்
ஏடுகொள் ளாமலும் இசையில்நில் லாமலும்
எழுதாது போன கவிபோல்
இலையில் இடாமலும் இருந்தேஉண் ணாமலும்
இடம் மாறி விழுந்த கறிபோல்
நாடுகொள் ளாதஜன நாயகத் தலைவர்கள்
நாட்டையே மாற்றி னாரே!
நலமுடைய சிறுகூடற் பட்டியில் வதிகின்ற
மலயரசி நங்கை தாயே!

              – கவியரசர் கண்ணதாசன்

நன்றி : வகுப்பறை