குதிரைஒரு முட்டைஇட
…..கோழிஅதை அடைகாக்கக்
……….குட்டியானை பிறக்கும்;
    குரங்குவயிற் றிருந்துவரும்
……….புனுகுஜவ் வாதுஅதில்
……………குங்குமப் பூவிருக்கும்;

மதுரைநகர் ஒருநாளில்
…..வானிலே பறந்தோடி
……….மாமண்டூர் அருகிலிறங்கும்;
……மாங்காயின் உள்வாயில்
……….தேங்காயும் இளநீரும்
……………மாதுளம் பழமுமிருக்கும்!

அதிசயங் காணலாம்
…..மாநிலசு யாட்சியில்
……….அடையவா என்தோழனே!
……ஆற்றறிவில் ஓரறிவு
……….போனவர்கள் அனைவரையும்
……………அழைக்கின்றேன் வருகவென்றே!

– கவிஞர் கண்ணதாசன்